தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளது..! எடப்பாடி பழனிசாமி...!!

 தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளது..! எடப்பாடி பழனிசாமி...!!

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதாக எதிா்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளாா். 

தமிழ்நாடு எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்றாா். அப்போது அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட உள்ள ஊழல் பட்டியல் குறித்து அவருக்குத்தான் தெரியும் என்று கூறினார். மேலும், திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

தொடா்ந்து பேசிய அவா், எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு ஏற்படும் எனவும், கொரோனோ முன்னெச்சரிக்கையாக திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் ஜனநாயகம் மடிந்து போய்விட்டது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், போதை பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் தொிவித்த எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் தாங்கள் பேசுவதை எடிட் செய்து நேரலையில் வெளியிடுவதாகவும் சாடினார்.

இதையும் படிக்க: அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் -ஐ அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் ஆதரவாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்