லாரி டயரில் சிக்கி முதியவர் உயிரிழப்பு....நெஞ்சை பதைபதைக்க செய்யும் சிசிடிவி காட்சிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே லாரியின் டயரில் சிக்கி முதியவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாரி டயரில் சிக்கி முதியவர் உயிரிழப்பு....நெஞ்சை பதைபதைக்க செய்யும் சிசிடிவி காட்சிகள்!

கிருஷ்ணகிரி மாட்டம் ஒசூர் அடுத்த கூஸ்தனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னமுனியப்பா(60) இவர் இருசக்கர வாகனத்தில் ஒசூரை நோக்கி வந்துள்ளார். அப்போது முதியவர் பாகலூர் - ஒசூர் நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னே சென்ற ஈச்சர் வாகனத்தின் பின் டயரில் மோதி நிலைதடுமாறி விழுந்ததாக கூறப்படுகிறது

இந்த விபத்தில் சின்னமுனியப்பாவின் கால், வயிறு பகுதிகளில் ஈச்சர் வானம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.