அ.தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல்... 15 மாவட்டங்களில் இன்று துவக்கம்...

அதிமுகவில் உள்கட்சித் தேர்தல் இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு தேர்தல்நடக்கிறது.

அ.தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல்... 15 மாவட்டங்களில் இன்று துவக்கம்...

திமுகவில் அமைப்பு ரீ தியாக பிரிக்கப்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அ திமுக நிர்வாகிகள் பொறுப்புகளுக்காகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உள்பட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பகு திகளுக்கு உள்ளிட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்றும் நாளையும் இரண்டு நாள்களாக நடைபெறுகிறது.

தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச் சீட்டு முறையில் அடிப்படை உறுப்பினர்கள் வாக்குகளை அளித்து நிர்வாகிகளைத் தேர்வு செய்வார்கள். அ. தி.மு.க. உள்கட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்துள்ளனர்.