நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு...

மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கன அடியாக குறைந்ததையடுத்து 16 கண்மதகு வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு...

மேட்டூர் அணையில் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி. இந்நிலையில், காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன்12  முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரம் குறைந்து வருகிறது. இதனால் நீர்வரத்து குறைந்து வருவதால் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அணை, சுரங்க மின் நிலையங்கள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு மின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கன அடியாக உள்ள நிலையில் அணை, சுரங்கமின் நிலையங்கள் வழியாக 20 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 500 கன அடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.