நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்.. விநியோக திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை!!

நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்..  விநியோக திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை!!

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் 3 நாட்கள் வரை மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து விநியோக திட்ட பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல் இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை அனுப்பினார். மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.