புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில்...சித்திரை தேர்திருவிழா கோலாகலம்...!

புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில்...சித்திரை தேர்திருவிழா கோலாகலம்...!

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் சிகர நிகழ்வான சித்திரை தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில், நிகழ்வாண்டிற்கான சித்திரை தேர்திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூலஸ்தானத்திலிருந்து அம்மன் புறப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. 

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு...ஈபிஎஸ், சசிகலா இரங்கல்!

இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, மக்கள் வெள்ளத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரினை ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டப்படி ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசனம் செய்தனர். 

இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இத்திருவிழாவையொட்டி, 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.