பயிர் வாடியதால் உயிரை விட்ட விவசாயி!!

நாகை அருகே கருகிய குறுவை பயிரை கண்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார். 

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியை சேர்ந்தவர் எம்.கே. ராஜ்குமார் (47). விவசாயியான இவர் சுமார் 15 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.

இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகி எரிந்து நாசமானதால் தொடர்ந்து கவலையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வயலுக்கு சென்ற அவர் காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அளித்து சம்பா சாகுபடிக்கான நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டு உள்ளார். அப்போது திடீரென நெஞ்சுவலி வந்து வயலிலேயே மயக்கம் அடைந்த அவரை சக விவசாயிகள் மீட்டு திருக்குவளையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிக்க || பொன்முடி வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமார்!!