பணிந்து போக தேவையில்லை; துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா!

பணிந்து போக தேவையில்லை; துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சியை பிடித்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75 வது பிறந்தநாள் இன்று. ஒரு பெண்ணாக அனைவரையும் எதிர்த்து நின்று 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றிய அஞ்சா நெஞ்சம் கொண்ட ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரும், தெலுங்கானாவின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது சமூக வலைதளபக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிக்க : உங்களால் நான்... உங்களுக்காக நான்....மறக்க முடியாத ஆளுமையின் 75வது பிறந்தநாள்!!!

அவருடைய ட்விட்டர் பதிவில், பணிந்து நின்று தான் பணி செய்ய வேண்டும் என்பதில்லை, துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்த பெண் ஆளுமை ஜெயலலிதாவின் நினைவை போற்றுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.