வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி குடும்பத்திற்கு நிதியுதவி...

வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்வதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி குடும்பத்திற்கு நிதியுதவி...

மயிலாடுதுறை : தொடர்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மழை நீர் தேக்கங்கள் காணப்படுகின்றன. இந்த தேக்கங்களை சரி செய்ய மழை நீர் வடிகால்வாய்கள் கட்டப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில், நேற்று, (நவ. 13), ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் மயிலாடுதுறையில் அரங்கேறியுள்ளது.

மேலும் படிக்க | தென்காசியில் மும்முரமாக தொடங்கிய பிசான நெல் சாகுபடி...

சீர்காழி வட்டம், எருக்கூர் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமன். அவருக்கு அக்ஷிதா என்ற ஐந்து வயது மகள் இருந்தார். நேற்று மாலை, தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த அக்ஷிதா, மழை நேரத்தில் வழுக்கி, அருகில் இருந்த கால்வாயில் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்றும் எந்த பலனுமின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்க | அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரையில் வழிந்தோடும் மழைநீர்...

தகவலறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த குழந்தையின் இழப்பு தனக்கு வேதனை அளிப்பதாகக் கூறிய நிலையில், அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கலும், ஆறுதலும் வழங்கியுள்ளார். அது மட்டுமின்றி, அந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்க இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ஒரு மாதமாக நீரில் மூழ்கிய வாழை மரங்கள்...

அந்த அறிக்கையில்,

“மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், எருக்கூர் கிராமம், வடக்கு தெருவில் வசித்து வரும் ராமன் என்பவரின் ஐந்து வயது மகள் அக்ஷிதா என்ற சிறுமி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) மாலை தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த பெரிய வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்”.

என தெரிவித்துள்ளார். இதனை, மக்கள் செய்தி தொடர்பு துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | கரைப்பாலத்தை மூழ்கடித்து ஆர்ப்பரித்து செல்லும் வெள்ள நீர்...