பட்டாசு ஆலை விபத்து: நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ். கோரிக்கை

பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் வெடி விபத்துகளை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே பட்டாசு உற்பத்தியில் முதன்மை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததால் வெடி விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி என பல்வேறு பகுதிகளிலும் வெடி விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் விதிகளை முறையாக பின்பற்றுவது குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.  

இதையும்  படிக்க   | ராணுவ பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் - சிரியாவில் 100 பேர் உயிரிழப்பு..!