ஏரியில் அங்கும் இங்குமாய் துள்ளி குதித்த மீன்கள்....தண்ணீரில் இறங்கி பிடிக்க முயன்ற சிறுவர்கள்...

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே கலங்கள் ஏரியில் மீன்கள் துள்ளிக் குதிப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்

ஏரியில் அங்கும் இங்குமாய் துள்ளி குதித்த மீன்கள்....தண்ணீரில் இறங்கி பிடிக்க முயன்ற சிறுவர்கள்...

கடந்து நான்கு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் ஏரிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள கலங்கல் ஏரியிலும் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இந்த ஏரியில் அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஏரியில் இருந்த மீன்கள் அங்கும் இங்குமாய் துள்ளி குதித்தன. இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆரவாரமிட்டு ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.