மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை...!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை முன்னிட்டு மறு அறிவிப்பு வரும்வரை பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, பொன்னேரி மற்றும் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், படகுகள், மீன்பிடி உபகரணங்கள், வலைகளை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.