சிவசங்கர் பாபாவின் பக்தைகள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்...

சிவசங்கர் பாபா'வின் பக்தைகள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவின் பக்தைகள் ஐந்து பேருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சுஷில் ஹரி பளள்யின்  நிறுவனர் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பள்ளியின்   ஆசிரியை தீபா வெங்கடராமன், ஜானகி சினிவாசன்,  கருணாம்பிகை, திவ்யா, பாரதி  ஆகியோர்  முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  அனைத்து  தரப்பு  வாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி  தொடர்பும் இல்லை என கூறி  முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அத்துடன்  காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்து இட வேண்டும்; பாஸ்போர்ட்டை  ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட  நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.