தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவுநேர விமான சேவை... கனிமொழி, எம்.பி. பேட்டி...

தூத்துக்குடி விமானநிலையத்தில் விரைவில் இரவு நேர விமான சேவை தொடங்குகிறது - தூத்துக்குடி யில் கனிமொழி பேட்டி

தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவுநேர விமான சேவை... கனிமொழி, எம்.பி. பேட்டி...

தூத்துக்குடி விமான நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் இது வரை 2 இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

விமான நிலைய ஊழியர்கள் உள்பட அனைத்து துறையினரும் தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைவில் நிறைவடையும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.  

இரவு நேர விமான சேவைக்கு மின்விளக்கு அமைக்கப்பட்டு வந்த பணி  நிறைவடைந்து விட்டது.  இதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. விரைவில் இரவு நேரத்தில் விமான சேவையைத் தொடங்கும்  என்றாா்.