பறக்கும் படையினர் அதிரடி சோதனை... கணக்கில் வராத 1,530,720 பணம் பறிமுதல்...

சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் 1 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பறக்கும் படையினர் அதிரடி சோதனை... கணக்கில் வராத 1,530,720 பணம் பறிமுதல்...

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சங்கராபுரம் ஒன்றிய தேர்தல் பறக்கும்படை அலுவலரும் தனி வட்டாட்சியருமான மணிகண்டன் தலைமையில் மற்றும் சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், முதன்மை காவலர்கள் ஏழுமலை மற்றும் சத்யராஜ் ஆகியோரைக் கொண்ட பறக்கும் படை குழுவினர் நேற்று சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ரூபாய்1,53,720 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர் திருவண்ணாமலை மாவட்டம்  கீழ்நாத்தூர் கிராமத்தைச்  சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.

இதனை எடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை சங்கராபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம பஞ்சாயத்து ரவிச்சந்திரன் இடம் ஒப்படைத்தனர்.