எச்சரிக்கை: மேகதாது அணையால் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும்!

எச்சரிக்கை: மேகதாது அணையால் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும்!

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று பொதுப்பணித் துறை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஆய்வுக்கூட்டம்:

பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த தஞ்சாவூர் மண்டல தலைவர் பரந்தாமன், கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு கிடைக்கப் பெறும் நீரின் அளவு குறையும் என்று கூறினார்.

இதையும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Arumugasamy-Commission-report-submission

இதன் காரணமாக தமிழ்நாட்டில் 35 சதவீத அளவுக்கு நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, 50 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கடும் உணவுப் பஞ்சமும் ஏற்படும் என்று எச்சரித்தார்.