சர்ச்சையான கலாஷேத்ரா விவகாரம் : முன்னாள் டிஜிபி தலைமையில் விசாரணை குழு அமைப்பு!

சர்ச்சையான கலாஷேத்ரா விவகாரம் : முன்னாள் டிஜிபி தலைமையில் விசாரணை குழு அமைப்பு!

கலாஷேத்ரா விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் முன்னாள் டிஜிபி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கலாஷேத்ரா விவகாரத்தில் பாலியல் புகாருக்கு உள்ளான 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியர், கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டததில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 

இதனிடையே, பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத் மற்றும் சாய் கிருஷ்ணா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் மாணவியரிடம் வாய் மொழி உத்தரவு அளித்துள்ளது. அத்துடன், மாணவிகள் தரப்பில் முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.  

இதையும் படிக்க : சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாடு...உரையாற்றிய முதலமைச்சர்!

இந்நிலையில், கல்லூரி மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி, 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் தாக்கல் செய்துள்ளார். 

இதற்கிடையில் மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்று கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் மற்றும் மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.