முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் சோதனை

முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர்  கே.சி. வீரமணி வீடு உள்பட 20 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியியுள்ளது.

சென்னை, வேலூர். திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, வீடுகளில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது கே.சி. வீரமணி வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது.