முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு காவி துணி அணிவிப்பு... கன்னியாகுமரியில் பரபரப்பு

குமரி மாவட்டம் ஆற்றூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு காவி துணி சுற்றப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலைக்கு காவி துணி அணிவிப்பு... கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி சிலை அமைக்கபட்டுள்ளது இந்த சிலையில் இன்று மதியம் திடீரென ராஜுவ்காந்தியின் கழுத்தில் காவி துணி சுற்றப்படிருந்தது இதையடுத்து தகவலறிந்த காங்கிரஸ் கட்சியினர் ராஜூவ்காந்தி சிலையில் சுற்றப்படாடிருந்த காவி துணியை அகற்றினர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியதில், ஆற்றூர் புளியமூடு பகுதியை சேர்த்த சசி என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் சிலையை தினமும் சுத்தம் செய்வதும், அவரே காவி துணியை போர்த்தியதும் தெரியவந்தது.  

அதை தொடர்ந்து காவல் துறை மனநலம் பாதிக்கப்பட்ட நபரை எச்சரித்து அனுப்பிவைத்தனர் எனினும் ராஜூவ்காந்தி சிலை மீதி காவிதுணி கட்ட யாராவது சொல்லியிருப்பார்களா அல்லது வேறு எதாவது காரணமா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.