அதிமுகவை வென்றவனும் கிடையாது கடவுளை கண்டவனும் கிடையாது: செல்லூர் ராஜூ பேச்சு

அதிமுகவை வென்றவனும் கிடையாது கடவுளை கண்டவனும் கிடையாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

அதிமுகவை வென்றவனும் கிடையாது கடவுளை கண்டவனும் கிடையாது: செல்லூர் ராஜூ பேச்சு

மதுரையில் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 
தமிழகத்தில் பல கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை தினந்தோறும் நடத்துகிறார்கள், அதிமுக தலைவர்கள் சிந்தித்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறினார். 

அதிமுகவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே திமுக தற்போது செயல்படுத்தி வருவதாகவும், திமுக விளம்பரத்தை விட்டு விட்டு மக்களுக்கு உண்மையான விடியலை தர வேண்டும்என பேசிய செல்லூர் ராஜு, அதிமுக சோர்வு அடைந்து விட்டதாக ஊடகங்கள் சொல்கிறது, புரட்சித் தலைவரின் படைகளை வெல்ல யாரும் இல்லை என்றார். 

 இன்று தேர்தல் நடந்தாலும் அதிமுக ஆட்சியை பிடிக்கும், அதிமுகவை வென்றவனும் கிடையாது, கடவுளை கண்டவனும் கிடையாது, முட்டாய் கொடுத்து குழந்தையை கடத்துவது போல திமுக மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துள்ளதாக குற்றச்சாட்டினார்.

திமுக சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரை பேச அனுமதிப்பது இல்லை, சட்டமன்றத்தில் மக்களை பற்றி தான் பேச போகிறோம், சொந்த கதையா பேச போகிறோம், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதாவது ஒரு தொற்று நோய் வந்து கொண்டு இருக்கிறது, நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு தொற்றும் வராது என பேசினார்.

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, முதல்வர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தியே ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் ஒன்றுக்கு ஒன்று முரணாக நடைபெறுவதாகவும், நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ நிதியை தமிழக அரசு விடுவிக்க வேண்டும், நகர்புற தேர்தல் வருவதால் திமுக அரசு மக்களுக்கு 5 ஆயிரம் நிதி வழங்க வேண்டும், தமிழகத்தில் மாணவர்கள் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை திமுக ஆட்சிக்கு வந்தாலே கட்ட பஞ்சாயத்து, ரவுடிஸ்ம் வந்து விடுவதாக குற்றச்சாட்டினார்.