திமுக-விற்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

திமுக அரசு சரியான பாதையில் செல்லும் பொழுது நிச்சயம் தங்களின் ஆதரவு தமிழக அரசுக்கு இருக்கும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக-விற்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?

கர்நாடகாவில் உள்ள மேகதாது அணை கட்டும் விவகாரம் குறித்து அனைத்துக்கட்சி குழு நேற்று மாலையே சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அதிமுக சார்பில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி அனைத்து கட்சி தலைவர்கள் மத்திய ஜல்சக்தி தலைவரை சந்திப்பதென முடிவு செய்து இன்று டெல்லி சென்று அவரை சந்திக்கின்றோம். அதிமுக பொறுத்தவரை தமிழக மக்கள் நலன் கருதியும்,விவசாயிகள் நலன் கருதியும் தமிழ்நாடு அரசு எடுக்க கூடிய ஆக்கபூர்வமான முடிவுகளுக்கு எங்களது முழு ஆதரவு உண்டு என்பதை தெரிவித்துவிட்டோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், உறுதியாக காவேரி நதிநீரை பொறுத்தவரை ஜீவாதர உரிமையை கடிக்காத்து முழுமையாக பெற்றது அதிமுக கழகம்.தற்போது உள்ள திமுக அரசை பொறுத்தவரை திசை மாறாமல் சரியான பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

திமுக அரசு சரியான பாதையில் செல்லும் பொழுது நிச்சயம் எங்களின் ஆதரவு அரசுக்கு இருக்கும். நிச்சயம் தமிழகத்திற்கு ஒரு முழு வெற்றி கிடைக்கும் அதற்கு அதிமுக நிச்சயம் துணை இருக்கும் என்றார்.