பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான நிகழ்வு: பள்ளி தலைமை ஆசிரியை உள்ளிட்ட 4 பேர் தற்காலிக பணி நீக்கம் !!!

நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தலைமையாசிரியை உள்ளிட்ட 4 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான நிகழ்வு: பள்ளி தலைமை ஆசிரியை உள்ளிட்ட 4 பேர் தற்காலிக பணி நீக்கம் !!!

நெல்லை டவுனில் உள்ள சாப்டர் மேனிலைப்பள்ளியில் கழிவறையில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான 4 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக தாளாளர் சாலமோன் செல்வகுமார் தலைமையாசிரியை  ஞான செல்வி, கட்டிட ஒப்பந்தகாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் இன்று நடைபெற்ற விசாரணையில் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள சிற தன்மை சான்றிதழ் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டன. மேலும் பள்ளியின் நிர்வாகம் சார்பில் பள்ளி நிர்வாகிகளும் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த விசாரணையில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த விபத்து தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்வி,  உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ் அருள் டைட்டஸ், சுதாகர், டேவிட் ஆகிய 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.