இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை வழிபட அனுமதிக்கவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு சனி பிடித்தே தீரும் ...பொன்னார் ஆவேசம்!

இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை வழிபட அனுமதிக்கவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு  சனி பிடிக்கும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை வழிபட அனுமதிக்கவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு சனி பிடித்தே தீரும் ...பொன்னார் ஆவேசம்!

கொரோனோ பரவல் காரணமாக தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள்  தரிசனத்திற்கு  அனுமதி வழங்க கோரி  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக  பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மதுரை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த  500க்கும் மேற்பட்ட பஜாவினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,

எந்த கஷ்டம் வந்தாலும் மக்கள் 2 இடங்களை நாடுவது வழக்கம், அதில் ஒன்று இறைவன் சந்நிதிக்கு செல்வது மற்றொன்று மருத்துவமனை ஆகவே இவை இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். மேலும் வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிற்று கிழமைகளில் இறை வழிபாடு நடத்த கூடாது என சொல்லும்  இந்த அரசு புறந்தள்ளப்பட வேண்டிய அரசு என்றும் இந்த அரசை மக்கள் ஒரு காலமும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியாளர்களிடம் மட்டுமே நோய் தொற்று உள்ளது என்றும் திமுக ஆட்சியாளர்களிடம் உள்ள இந்த நோய் இந்துக்களுக்கு எதிராக செயல்பட தூண்டிக்கொண்டிருக்கிறது என்றார். மேலும் இறைவனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை இறைவனை வழிபட  அனுமதிக்கவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு  சனி பிடித்தே தீரும் என தெரிவித்தார்.