பொது சிவில் சட்டம்: இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்..!

பொது சிவில் சட்டம்:    இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்..!

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வலியுறுத்தி இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சட்டங்களில், ஒரே மாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரே மாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்துக்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் எனக் கோரி, இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ரிதுராஜ் அவஸ்திக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இதையும் படிக்க   | உள்ளாட்சி பிரதிநிகளுக்கு மதிப்பூதியம் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.