துபாய், சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கள் பறிமுதல்....!!

துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ. 1 கோடியே 13 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கம், எல்க்ட்ரானிக் பொருட்கள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாய், சார்ஜாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கள் பறிமுதல்....!!

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த  பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது 4 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து அவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் மரத்தூள் கொண்ட அட்டை பெட்டிகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதனைதொடர்ந்து கடத்திவந்த ரூ.49 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 147 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் 4 பேரின் சூட்கேசில் இருந்து ரூ.42 லட்சத்தி 4 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

அதுப்போல் சார்ஜாவில் இருந்து வந்த  பயணியின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கேபிள் வயரில் ரூ.11 லட்சத்தி 87 ஆயிரம் மதிப்புள்ள 275 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.