சென்னை விமானநிலையத்தில் ரூ.45.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்...சுங்கத்துறையினர் அதிரடி...!!

இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் செருப்பு மற்றும்  உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த  ரூ.45.5 லட்சம் மதிப்புடைய 928 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமானநிலையத்தில் ரூ.45.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்...சுங்கத்துறையினர் அதிரடி...!!

இலங்கையிலிருந்து சென்னை வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சோ்ந்த 6 பயணிகள் ஒரு குழுவாக இந்த விமானத்தில் வந்தனா். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த 6 பயணிகளையும் நிறுத்தி விசாரித்த போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா் இதையடுத்து அவா்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர் அவா்களில் 2 போ் தங்கள் கால்களில்  அணிந்திருந்த செருப்புகளில் தங்கப்பசை பாக்கெட்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

மற்ற 4 பயணிகளின் உள்ளாடைக்குள் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவைகளின் மதிப்பு ரூ.45.5 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து 6 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.