சுதந்திரத்திற்கு பின் முதன் முதலாக அரசு பஸ்... கையசைத்து வரவேற்ற சிறுவர், சிறுமிகள்...

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த  குவளை வேலி கிராமத்திற்கு சுதந்திரத்திற்கு பின் முதன் முதலாக அரசு பஸ் இயக்கப்பட்டதால் சிறுவர் சிறுமியர்கள் ஆராவாரத்துடன் கையசைத்து வரவேற்றனர்.

சுதந்திரத்திற்கு பின் முதன் முதலாக அரசு பஸ்... கையசைத்து வரவேற்ற சிறுவர், சிறுமிகள்...

மானாமதுரை அருகே குவளை வேலி கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் , வெளியூர் செல்ல 6 கி.மீ தூரம் உள்ள முத்தனேந்தல் சென்று பஸ் ஏற வேண்டும் , அரசு பஸ் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.

இந்த நிலையில்  திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் தற்போது குவளைவேலியில் இருந்து நாள் ஒன்றுக்கு தலா 3 முறை இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குவளைவேலியில் இருந்து சிவகங்கை மற்றும் பழையனூர் ஆகிய இரு நகரங்களுக்கும் பஸ் போக்குவரத்தை எம்.எல்.ஏ. தமிழரசி தொடங்கி வைத்தார்.