சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து...அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வேலூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  54 பயணிகளும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து...அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எஸ் பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வேலூரில் இருந்து சேலம் நோக்கி 54 பயணிகளுடன் அதிகாலையில் வந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின்போது பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் மற்றும் நடத்துனர் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினர். அதிஷ்டவசமாக அனைவரும் சிறிய காயங்களோடு  நூலிழையில் உயிர் தப்பினர்

கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி ஏற்கனவே இதுபோன்று விபத்து ஏற்பட்டு மூன்று உயிர்களை இதே இடத்தில் பலியானது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இடத்தை அபாயகரமான பகுதியாகவும், பாலங்கள் இருப்பது தெரியாத வகையில் உள்ளதால் அதற்கான  குறியீட்டு பலகை வைக்க வேண்டும் என்று எஸ்.பட்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.