"குழந்தைகளின் படிப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

"குழந்தைகளின் படிப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" - தேமுதிக தலைவர்  விஜயகாந்த்.

தெருக்கள் தோறும் மதுக் கடைகள் திறப்பதை விடுத்து குழந்தைகளின் படிப்பில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்:- 

தென்காசி மாவட்டம் வி. கே. புதூர்  தாலுகாவில் அமைந்துள்ள அச்சங்குன்றம் என்ற கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் சுமார் 200 குழந்தைகளுடைய படிப்பு கேள்விக்குறியாவதாகவும், பள்ளிக்கூடம் இல்லதாதால் கோவிலிலும், கல்யாண மண்டபத்திலும் வைத்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், மேலும், அக்குழந்தைகளுக்கு மதிய உணவும்  அந்த ஊர் மக்களே வழங்குவதாகவும் குறிப்பிட்டார். 

அதோடு,  குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடி பள்ளி கட்டுவதற்கு  இடம் ஒதுக்கி கொடுத்தும், மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் அம்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரிடம் பள்ளி கட்ட அனுமதி மட்டும் கேட்டு மனு அளித்தும் இன்னும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். 

அதோடு, தெருவுக்கு தெரு டாஸ்மாக் மற்றும், அதிநவீன பார்கள், மற்றும், டெட்ரா பேக்குகளில் மது விற்பனை செய்தல், கூடவே, வெளிநாட்டிலிருந்தும் வரும் மதுபானங்களுக்கு விலை உயர்த்துதல்   என தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றுவதற்கும், டாஸ்மாக்  விற்பனை செய்வதிலும் மும்மரம்  காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிப்பதாகக் குறிப்பிட்டார். 

மேலும். பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வி. கே. புதூர் தாலுக்காவில் அமைந்துள்ள, அச்சங்குன்றம்  கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் எனவும்,   பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசு, குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டுமென தேமுதிக சார்பில் வலியுறுத்தியும்  தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

இதையும் படிக்க   |  "மது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், சமுதாயத்திற்கு நிறைய சேவை செய்திருப்பேன்" ரஜினிகாந்த் வருத்தம்!