இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர்; காரணம் என்ன?

இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர்; காரணம் என்ன?

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பரபரப்பான அரசியல் சூழலில் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஜீன் 29-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதைத்தொடர்ந்து, 5 மணி நேரத்திலேயே இந்த உத்தரவை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பித்தார். அதன் பிறகு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்தை கேட்க இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று மாலை  4. 55 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார். ஆளுநரின் இந்த திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!