''இஸ்லாமியர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம்'' - விசிக தலைவர் திருமாவளவன்.

''இஸ்லாமியர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம்'' - விசிக தலைவர் திருமாவளவன்.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், 25 ஆண்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்:- 

” திமுக அரசு 700 சிறைவாசிகளை 14 ஆண்டுகள் தண்டனை காலமுடிந்தவற்களை விடுதலை செய்ய ஆணையிட்டு உள்ளது, ஆளுநர் அந்த அரசாணையை ஏற்று சிலரை விடுதலை செய்து உள்ளனர் ஆனால் 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகள் 37  பேருக்கு விடுதலை கிட்டவில்லை, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளிடம் இருந்து குரல் எழுப்பி வருகிறது என கூறினார்.

மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளையொட்டி 14 ஆண்டு காலம் கடந்தவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது, இந்த நேரத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் கைதிகளாக உள்ள 37  இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான முன் ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது, இந்த கோரிக்கை முழுமையாக இறக்க வேண்டும் அனைவரும் விடுதலை செய்ய வேண்டும்”  என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ” 37 பேரின் குடும்பங்களை பாதுகாக்கவும், தமிழக அரசு கருணை கொண்டு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்த்துவர்களுக்கு திமுக அரசு அப்போதும் பாதுகாப்பாக உள்ளது என்று பொதுவான நம்பிக்கை மக்களிடம் உள்ளதாகவும், இஸ்லாமியார்களை விடுதலை செய்ய கூடாது என தமிழ்நாட்டில் சில அமைப்புகள் உள்ளது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அப்படி எதிர்க்கும் சூழல் உள்ளது, எதிர்ப்பு இல்லாத நிலையிலும் விடுதலை செய்ய வேண்டும்”,  என கேட்டுக் கொண்டார்.

ஆயுள் தண்டனை என்பது எவ்வளவு காலம் என்பதில் ஒரு வரையறை இல்லை, சிறைவாசிகளின் நன்னடத்தையின் அடிப்படையில் இதுவரை அரசின் சார்பில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் அரசு 700 பேரின் பெயர் பட்டியலை அனுப்பி வைத்தும் ஆளுநர் ஒவ்வொரு ஆட்களையும் ஆய்வு செய்த பிறகு தான் விடுதலை செய்தார்கள், இன்னும் கூட சிலர் வெளியே வரவில்லை, இஸ்லாமியர்களை விடுதலை செய்வதில் ஆளுநர் மாளிகை தாமதம் செய்கிறது”  என தெரிவித்தார்.

இதையும் படிக்க   | ஆதியோகி சிலை விவகாரம்: ஈஷா பதில்...!