குட்டியானையில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே லாரியில் கடத்திவரப்பட்ட  ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குட்டியானையில் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!!!

சேலம் மாவட்டத்திலிருந்து  கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதிக்கு, தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போதைப் பொருட்களை ஈச்சர் லாரியில் கடத்தி வரப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கண்காணிப்பாளரின் உத்தரவு பேரில் வேப்பூர் அருகே, தனிப்படை போலீசார் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பெண்ணாடம் அடுத்துள்ள அரிகேரி கிராமத்தை சேர்ந்த  மகேந்திரன் அதே ஊரைச் சேர்ந்த தெய்வமணி மற்றும் ஆரோக்கியசாமி ஆகிய மூன்று பேரும் சேலத்தில் இருந்து பெண்ணாடம் அருகே உள்ள அரிகேரிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை  கடத்தி வந்து தெரியவந்தது.

ஈச்சர் லாரியில் உள்புரம் ரகசிய அரை  அமைத்து  அதனுள்  65  மூட்டைகளில் 5 லட்சம்   மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து  கடத்தி வந்தது தெரியவந்தது இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார்  ஈச்சர் வாகனத்தையும்  பறிமுதல் செய்தனர்.