"எண்ணூருக்கு அங்கிட்டு இந்தியா எங்கு இருக்குனு திமுகவினருக்கு தெரியாது" எச். ராஜா பேச்சு!

"எண்ணூருக்கு அங்கிட்டு இந்தியா எங்கு இருக்குனு திமுகவினருக்கு தெரியாது" எச். ராஜா பேச்சு!

பிஜேபி 9 ஆண்டுகாலம் சாதனை குறித்து பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே நடைபெற்றது.  இதில் பிஜேபி மூத்த தலைவர் எச். ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசிய போது, "ஒரு நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று தெரிந்தவர் பாரத பிரதமர். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம், பெண்களின் மானத்தை காப்பாற்றுவதற்காக  12 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டிக் கொடுத்துள்ளோம், தமிழ்நாடை கொள்ளை அடிப்பவர்கள் இனிமேல் கொள்ளை அடிக்கக் கூடாது. இது திராவிட மாடல் ஆட்சி இல்லை, ரவுடியின் மாடல் ஆட்சி. அவர்களுக்கு எண்ணூருக்கு அங்கிட்டு இந்தியா எங்கு இருக்கு என்று திமுகவிற்க்கு தெரியாது, மக்களைப் பற்றி காங்கிரஸுக்கு கவலை கிடையாது. மக்கள் மருந்தகத்தின் பெயர் பிஜேபி மருந்தகம் ஏனென்றால் அது பிஜேபியின் திட்டம்" என கூறியுள்ளார்.

மேலும்,"அமெரிக்காவைப் போன்று 3 மடங்கும், இங்கிலாந்து 8 மடங்கும், கொரோனா காலத்தில் மாதம் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு வழங்கிய ஆட்சி பாரத பிரதமர் ஆட்சி, அமைச்சர் செந்தில் பாலாஜி 38 நாட்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது மேகலாவிற்கு கூட தெரியாது, பிஜேபி எங்கெங்கு வேட்பாளரை நிறுத்துகிறதோ அங்கெல்லாம் ஒட்டு கேட்க வருவேன் எனக்கென்று ஓட்டு கேட்க மாட்டேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும், "பல்வேறு விஷயத்தில் மக்களை திசை திருப்பும் வேலையில் திமுக இருக்கிறது, சர்வதேச அளவில் மிகப்பெரிய ஆளுமையாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச மாட்டேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, நேருவிடம் எழுதி வாங்க வேண்டும், புதிய டிஜிபி வந்திருக்கிறார் மாற்றம் வரும் என நினைத்தேன் ஏமாந்து போனேன், சகோதரி துர்கா ஸ்டாலின் தவிர, தமிழக முதல்வர் உள்பட அனைவரும் சிறைக்குச் செல்வார்கள், 2024ல் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக வரும்" என பேசியுள்ளார்.

இதையும் படிக்க || "உரிமை தொகைக்கான குடும்ப தலைவிகளை அடையாளம் காண சிறப்பு முகாம்கள்" மேயர் பிரியா!