திருச்சியிலும் கோலாகலமாக தொடங்கியது ”ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” நிகழ்ச்சி!

திருச்சியிலும் கோலாகலமாக தொடங்கியது ”ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” நிகழ்ச்சி!

திருச்சி மாவட்டத்திலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. 

சென்னை, கோவை, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. திருச்சி நீதிமன்ற சாலை பகுதியில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.   

இதையும் படிக்க : 6,000 கோடி ரூபாய் முதலீட்டில் 10 தொழிற்சாலைகளுக்கு அனுமதி!

இந்த நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆடியும் பாடியும் கொண்டாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, கயிறு இழுத்தல், கோலப்போட்டி என பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா, உடற்பயிற்சிகள், செல்ல பிராணிகள் கண்காட்சி என ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால்  திருச்சியில் அண்ணாசாலை முழுவதும் களைகட்டியது.