உடுமலையில் பலத்த மழை ...தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பலத்த மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் கொட்டுகிறது.

உடுமலையில் பலத்த மழை ...தடுப்புகளை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவிக்கு கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலை ஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளன. இந்நிலையில் பஞ்சலிங்க அருவி பகுதிகளில் பெய்த  பலத்த மழை காரணமாக, வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி வெள்ளம் ஆரபரித்து கொட்டுகிறது.  ஆரபரித்து  கொட்டும் அருவி  நீர்  அடிவாரப் பகுதியில் உள்ள பிரம்மா, சிவன்,விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சப்தகன்னிமார் கோவிலை தழுவிவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. 

மேலும் அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் உண்டியலை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டியிருந்தனர். அத்துடன் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.