போலீசார் செய்த சித்ரவதையாலேயே கணவர் தற்கொலை...கண்ணீர் மல்க தெரிவிக்கும் மனைவி!

போலீசார் செய்த சித்ரவதையாலேயே கணவர் தற்கொலை...கண்ணீர் மல்க தெரிவிக்கும் மனைவி!

காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததாலேயே, தனது கணவர் தீக்குளித்து உயிரிழந்ததாக சிறைக் காவலர் ராஜாவின் மனைவி விஜயா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 

திருச்சி செம்பரையைச் சேர்ந்த சிறைக் காவலர் ராஜாவுக்கும் அவரது சகோதாரர் நிர்மல் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜா, காவல் நிலையம் அருகே தீக்குளித்துள்ளார்.

இதையும் படிக்க : அரசியல் பேச மனம் நினைக்கிறது; அனுபவம் வேண்டாம் என மறுக்கிறது - ரஜினிகாந்த பேச்சு!

இந்நிலையில், தனது கணவரின் தற்கொலை குறித்து பேசிய மனைவி விஜயா, சிறை காவலராக பணியாற்றிய எனது கணவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்த காரணத்தினால் கடந்த ஆறு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இந்த தருணத்தில் விசாரணைக்காக அவரை அழைத்து சென்ற போலீசார் முறையாக விசாரிக்காமல் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் விஜயா தெரிவித்துள்ளார்.