"ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை" உயர் நீதிமன்றம்!

"ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை"  உயர் நீதிமன்றம்!

தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 டிரைவர்கள் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சுகாதார துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன் ஆம்புலஸ் டிரைவர்களாக நியமிக்கப்பட்ட நெப்போலியன், சரவணன் உள்பட 65 பேர், பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், கொரோனா பேரிடர் காலங்களில்  பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணியாளர்களின் நலன்களை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், பணி நிரந்தரம் வழங்கும் போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால், பணி நிரந்தரம் கோரி அளித்த விண்ணப்பங்கள் மீது அரசு எந்த முடிவும் எடுக்காமல், பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருவதாகவும், காலியாக உள்ள 800 டிரைவர்கள் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல்,  டிரைவர் பணி காலியிடங்களை நிரப்ப தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். எஸ்.ரமேஷ், 800 டிரைவர் பணியிடங்களை நிரப்பவும், தற்காலிக ஆம்புலஸ் டிரைவர்களை பணி நீக்கம் செய்யவும் இடைக்கால தடை விதித்து உத்தர்விட்டார்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிக்க:அமெரிக்கா செல்லும் கேரள முதல்வர்!