ஜன. 31 வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை  : 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடரும்!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கல்லூரிகள் மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 31 வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை  : 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடரும்!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரியில் கல்வி பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 க்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் தொடரும் என்றும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.