21 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை... பெரும்பாலான மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை...

தமிழகத்தில் கனமழை காரணமாக 21 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

21 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை... பெரும்பாலான மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இன்று முதல் வியாழக்கிழமை வரை, மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதில் பெரும்பாலான மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக, இன்றும் நாளையும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதைப்போல, 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருந்த நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.