தீபாவளிக்கு அரசு விரைவு பஸ்களில் சொந்த ஊர் செல்வோர் நாளை முதல் முன்பதிவு செய்யலாம்...

தீபாவளி பண்டிகையொட்டி அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் முன்பதிவு தொடக்கவுள்ளது.

தீபாவளிக்கு அரசு விரைவு பஸ்களில் சொந்த ஊர் செல்வோர் நாளை முதல் முன்பதிவு செய்யலாம்...

நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை வரவுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.இதற்காக பலர் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 

அந்த வகையில் அரசு விரைவு பஸ்களில் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம், திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு பஸ்களும் படுக்கை வசதி கொண்ட பஸ்களும், குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படுகின்றன.