வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் விற்பனை ஆகவில்லை

வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் விற்பனை ஆகவில்லை என்பது உண்மையென்றும், அதற்கான காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் விற்பனை ஆகவில்லை

வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் விற்பனை ஆகவில்லை என்பது உண்மையென்றும், அதற்கான காரணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள தந்தை பெரியார் சமூக நலக்கூடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்று இதுவரை விற்பனைப்பத்திரம் பெறாதவர்களுக்கு பெற்று கொள்ள 3 நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்று இதுவரை விற்பனைப் பத்திரம் பெறாதவர்களுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி வழங்கி துவக்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, சொத்து பத்திரங்கள் வீட்டு வசதி வாரியத்தால் ஒப்படைக்க படாமல் இருக்கிறது என்றும், அதை உடனடியாக வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.