கணவன் மனைவி போல் நடித்து கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது..!

மார்த்தாண்டம் அருகே, கணவன் - மனைவி போல் நாடகமாடி, கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனா்.

கணவன் மனைவி போல் நடித்து கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வழியாக, கஞ்சா கடத்த இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்ருந்த தம்பதியிடம், விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் கணவன் - மனைவி போல் நடித்து, கஞ்சா கடத்த முயன்றதைக் கண்டறிந்தனர்.

மேலும், அவா்கள் வைத்திருந்த சூட்கேசில் இருந்து, 15 கிலோ கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.