இரு சக்கர வாகனம் மீது குட்டி யானை மோதி கணவன் பலி.. மனைவி படுகாயம்!!

இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி மீது குட்டி யானை வண்டி மோதி விபத்து.

இரு சக்கர வாகனம் மீது குட்டி யானை மோதி கணவன் பலி.. மனைவி படுகாயம்!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை.

இவர் தனது மனைவி கீர்த்திகா மற்றும் தனது அண்ணன் மகள் கனிஷ்கா வயது 9 ஆகியோருடன் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்றுவிட்டு காரைக்குடி செஞ்சை அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.

அப்போது தேவகோட்டையில் இருந்து அதிவேகமாக வந்த டாட்டா ஏசி வாகனம் செல்லத்துரையின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லத்துரை, அவரது மனைவி, அண்ணன் மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதில் சிகிச்சை பெற்று வந்த செல்லத்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செல்லத்துரையின் மனைவி மற்றும் அண்ணன் மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த விபத்தை ஏற்படுத்திய டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் முத்துப்பாண்டி குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்து இந்த விபத்து ஏற்படுத்தியதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.