18 வயது நிறைவடையாத காதல் மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்ற கணவர் போக்சோவில் கைது...!

18 வயது கூட ஆகாத சிறுமியை கர்ப்பமாக்கிய காதல் கணவன் போக்சோ சட்டத்தில் கைது...

18 வயது நிறைவடையாத காதல் மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்ற கணவர் போக்சோவில் கைது...!

சேலத்தில்  சிறுமியை திருமணம் செய்த காதல் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொதுவாக 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களை திருமணம் செய்ய கூடாது என சட்டம் இருப்பதையே மறந்து சிலர் உலா வருகின்றனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்.  இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

இன்னும் 18 வயது கூட நிறைவு பெறாத சிறுமியை காதலித்து தமிழ்செல்வன், கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.  

இந்நிலையில்,  கர்ப்பமடைந்த அந்த சிறுமி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் சிறுமிக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என்பதை அறிந்து அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே, புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார், மேஜர் வயதை தாண்டாத சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கணவர் தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.