சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது...!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது...!!

ஓமலூர் அருகே ஒண்டிவீரனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். கூலி வேலை செய்து வரும் இவர், அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

அதனைதொடர்ந்து சிறுமி கர்ப்பமடைந்ததையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார்.அங்கு மருத்துவர்கள் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ததுடன், அவரின் பிறந்த தேதியை ஆய்வு செய்தனர். அப்போது கர்ப்பமாக உள்ள பெண் 17 வயது சிறுமி என்பது தெரியவந்தது.  

இதனை தொடர்ந்து மருத்துவர்கள், சிறுமி கர்ப்பம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதனைதொடர்ந்து கணவரை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.