“திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதால்தான் பாதுகாப்பாக உள்ளேன்....” காயத்ரி ரகுமான்!!

“திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதால்தான் பாதுகாப்பாக உள்ளேன்....” காயத்ரி ரகுமான்!!

அண்ணாமலை வெளியிடும் சொத்துப் பட்டியல் எல்லாமே மக்களுக்கு தெரிந்த ஒன்று தான் , அதில் புதிதாக ஒன்றும் இல்லை.  அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற போது கட்சிக்கு வளர்ச்சி என நினைத்தோம் ஆனால் வீழ்ச்சி தான்.

சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பின்  நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “அம்பேத்கர் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான தலைவர், அவருடைய பிறந்தநாளில் மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சி.  இத்தனை ஆண்டுகளாக சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம்.  தை ஒன்று மட்டுமல்ல எல்லா நாளும் தமிழர்களுக்கு புத்தாண்டு தான்.” எனக் கூறினார்.

மேலும், “அண்ணாமலை வெளியிடும் சொத்துப் பட்டியல் எல்லாமே மக்களுக்கு தெரிந்த ஒன்று தான் , அதில் புதிதாக ஒன்றும் இல்லை.  அவரிடம் புதிய தகவல்கள் இருந்திருந்தால் ஜனவரி மாதமே வெளியிட்டு இருப்பார். அவர் வெளியிடும் அறிக்கையில் ஒரு பயனும் இல்லை.  அவர் வெளியிடும் அறிக்கையில் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கவுன்சிலர்கள் அல்லாதவர்களும் உள்ளனர்.” எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற போது கட்சிக்கு வளர்ச்சி என நினைத்தோம் ஆனால் வீழ்ச்சி தான்.  நான் வைத்த குற்றச்சாட்டுகள் மீது தற்போது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.  தலைமைக்கு என்ன அறிக்கை சென்றுள்ளது எனவும் தெரியவில்லை.” எனவும் கூறினார்.

வேறு கட்சியின் இணைய போகிறீர்களா என்ற கேள்விக்கு , “திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதால்தான் பாதுகாப்பாக உள்ளேன்.  திமுக அதிமுக இரண்டுமே திராவிட கட்சி தான்.  எந்த கட்சியில் இணைகிறேன் என்பதை விதிதான் முடிவு செய்யும்.” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:     “தமிழர்கள் குறித்து மோடி பேசுவது ஏமாற்று வேலை...” வைகோ பேட்டி!!