அவர் அரசியலில் எங்கு போக போகிறார் என்று தெரியவில்லை... செல்லூர் ராஜூ!!

அவர் அரசியலில் எங்கு போக போகிறார் என்று தெரியவில்லை... செல்லூர் ராஜூ!!

அதிமுக மேல் துரும்பைக் கொண்டு வீசினால் தூணைக் கொண்டு எறிவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை தொடங்கிய அத்வானி, வைகோ, ராகுல் காந்தி ஆகியோர் அரசியலில் என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.  ஆனால் அவர்கள் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது இதுபோல் அண்ணாமலையும் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரை தொடங்குகிறார் அவர் அரசியலில் எங்கு போக போகிறார் என்று தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ அண்ணாமலை பேரணியில் பேசுவேன் என்று கூறியிருக்கிறார் எனவும் அதிமுக குறித்து அண்ணாமலை பேசினால் அதற்கான பதிலடி கொடுப்போம் என்றும் கூறினார்.  மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை குறித்து யார் பேசினாலும் தகுந்த பதிலடி தருவோம் எனத் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ எங்கள் மேல் துரும்பை கொண்டு வீசினாலும் தூணைக் கொண்டு எறிவோம் எனவும் அண்ணாமலை புரட்சி பயணம் போகும் போது அதற்கான பதிலடி கொடுப்போம் என்றும் செல்லூர் ராஜு திட்டவட்டமாக கூறினார்.

இதையும் படிக்க:   மக்களின் ஆதரவு இருக்கும்வரை ஆம் ஆத்மியை அழிக்க முடியாது... அரவிந்த் கெஜ்ரிவால்!!!