”திமுகவில் ஏற்றத்தாழ்வை நான் எதிர்கொண்டதில்லை” - மேயர் பிரியா.

”திமுகவில் ஏற்றத்தாழ்வை நான் எதிர்கொண்டதில்லை” - மேயர் பிரியா.

திமுகவில் ஏற்றத்தாழ்வை நான் எதிர்கொண்டதில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்  தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுளாவிற்கு அழைத்துச்செல்லும் வகையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் கொடியசைத்து ரிப்பன் மாளிகையில் இருந்து பேருந்துகளை அனுப்பி வைத்தார்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின் படி ரூபாய் 11 லட்சம் செலவில் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5200 மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் அழைத்து செல்லப்படுகின்றனர். முதற்கட்டமாக இன்று 521 மாணவ,மாணவிகள் அண்ணா நூலகம், பிர்லா கோலரங்கம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா.

திமுக கடைப்பிடிக்கும் சமூகநீதி கொள்கை தான் மாமன்னன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் சரிபாதி இடங்களில் பெண்கள் தான் பொறுப்புகளில் உள்ளனர். கட்சியில் இதுவரை நான் ஏற்றத்தாழ்வை எதிர்கொண்டதில்லை. திமுகவில் ஏற்றத்தாழ்வு ஏதும் இல்லை என்று கூறினார்

தொடர்ந்து பேசிய அவர்
மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை கடந்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்,
செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.மேலும்
தாமதமாக பணிகளை மேற் கொள்ளும் ஒப்பந்ததார்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும், பின்னர் அபராதம் விதிக்கப்படும்,
தூர் வாரும் பணிகளை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளோம் என தெரிவித்தார்

அதே போல பட்ஜெட் அறிவிப்பின்படி முதற்கட்டமாக இன்று மாணவர்கள் சுற்றுலாப் பயணம் சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்
மேலும்,புதிதாக 139 பள்ளிகள் இணைக்கப்பட்டு உள்ளது, மிகவும் சேதாரம் அடைந்த 46 பள்ளிகள் கண்டறியப்பட்டு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் பள்ளிகளை சீரமைக்க 50 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.விரைவில் டெண்டர் அறிவிக்கப்பட்டு பணிகள் துவங்கும்
என்று கூறினார்.