சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டை சட்ட ரீதியாக சந்திப்பேன் - விஜயபாஸ்கர்

தனது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டை சட்ட ரீதியாக சந்திப்பேன் - விஜயபாஸ்கர்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது வீட்டில் இருந்து எந்த விதமான பணம், நகை உள்ளிட்ட ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என கூறினார்.

எனது எல்லா சொத்துக்களுக்கும் முறையான ஆவணங்கள் உள்ளது. அதை தேவைப்படும்போது காண்பிக்க தயாராக உள்ளேன் என்றார். மேலும் மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. அதிமுகவிற்கு சோதனை என்பது புதிதல்ல. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றார்.