இந்து விரோத அரசாங்கத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன்....எச்.ராஜா ஆவேசம்...!!

இந்து விரோத அரசாங்கத்தை தோலுரிக்காமல் விட மாட்டேன் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்து விரோத அரசாங்கத்தை தோலுரிக்காமல் விடமாட்டேன்....எச்.ராஜா ஆவேசம்...!!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில்,

கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாஸில் சென்றவர்கள் எல்லாம் தமிழக அமைச்சராக இருக்கின்றனர். ஒரு அமைச்சர் என்னை வெறி நாய் என்கிறார். திருடனைப் பார்த்து நாய் குறைக்கத்தான் செய்யும் என்று கூறிய அவர், இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்களை கொள்ளை அடிக்கும் துறையாக உள்ளது என விமர்ச்சித்தார். 

கடந்த வருடம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிமன்ற உத்தரவுபடி தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் நடக்கவில்லை என்றால் அரசனுக்கு ஆகாது என்று சொல்வார்கள். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் இடிந்து வருகிறது.

அதை பராமரிக்கவில்லை. ஆனால் நன்றாக இருக்கின்ற கோயில்களை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் அரசு ஈடுபடக் கூடாது என தெரிவித்தார்.